பொருளடக்கம்
அசோலா வளர்ப்பு
அசோலா மிக சிறந்த புரத சத்து மிகுந்த உணவு இதை உற்பத்தி செய்து கொடுக்கலாம் கீரை வகைகள் அனைத்தும் சத்து மிகுந்தது கீரைகள் உற்பத்தி செய்து கொடுக்கலாம். கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம், கரையானில் புரத சத்தும் வளர்ச்சி ஊக்கிகளும் உள்ளன இதனால் கோழியின் வளர்ச்சி நன்றாக இருக்கும. க றிகடையில் ஆட்டு உதப்பை வாங்கி வந்து 4 நாட்கள் ஒரு துணி பையில் கட்டி வைத்தால் புழுநிறைய உற்பத்தி ஆகும் அதனை கோழிகளுக்கு தரலாம். காய்கறி கழிவு, தேங்காய் மலிவாக கிடைத்தால் தரலாம். தேங்காய் கொடுப்பதால் குஞ்சுகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். பழ வகைகள் அனைத்தையும் தரலாம், மீன் கழிவு தரலாம், ரைஸ் மில்லில் வீணாகும் மாவை வங்கி வந்து தன்னீர் ஊற்றி பி சரி வைக்கலாம்
அசோலா தயாரிக்க தேவைபடும் பொருட்கள்
சாணம், பாறைத்தூள், அசோலா, தண்ணீர்
உங்களுக்கு பாறைத்தூள் கிடைக்காவிட்டால் கடைகளில் கிடைக்கும் ராக்பாஸ்பேட் பயன்படுத்தலாம் இது இயற்கையானப் பொருள்தான்
தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை தண்ணீரை நிரப்பி, ஒரு கிலோ சாணம், ஒரு கைப்பிடி பாறைத்தூள், ஒரு கைப்பிடி அசோலா விதை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கிவிட வேண்டும்.
இந்த பாறைத்துளிதான், அசோலா வளர்வதற்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள்… போன்றவை உள்ளன. அதனால்தான், கட்டாயம் பாறைத்தூள் போட வேண்டும் என்று சொல்கிறோம். சில பகுதிகளில், பாறைகள் இருக்காது. அங்கு ஆழ்குழாய்க் கிணறு எடுக்கும் போது, வெளியில் வந்த மண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் முறையாகச் செய்தால், அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். தொடர்ந்து சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டு வந்தாலே, பல்கிப் பெருகி விடும். உங்கள் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து கிடைக்கும் தூள்தான் பாறைத் தூள்.
ஒருவேளை உங்கள் பகுதியில் கிடைக்கும் பாறைத் தூளில் இரும்பு, மக்னீசியம்…. போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அசோலா பெருகுவதற்கு நாட்கள் பிடிக்கும். இந்தக் குறையைப் போக்க, கடைகளில் விற்கப்படும் ராக்பாஸ்பேட் தூளை ஒரு கைப்பிடி அளவுக்குப் போடலாம். பாறைத் தூள் கிடைக்காத பகுதியில் உள்ளவர்களும், இந்த ராக்பாஸ்பேட் தூளைப் பயன்படுத்தலாம். இது இயற்கையானப் பொருள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா.
Go to top
CO5
cultivating method
1.Rotavator கொண்டு உளவு செய்த பிறகு….
2.ஒன்றரை அடி பார் ஓட்டிக்கொள்ள வேண்டும்…
3.நீர் பாய்ச்ச ஏதுவாக பார் அத்து கட்டிக்கொள்ளவேண்டும்…
4.பிறகு ஒன்றரை அடிக்கு ஒரு co5 கரனையை சாய்வாக ஊன்ற வேண்டும்.
5.ஊன்றிய பிறகு நீர் பைசாவேண்டும்.
6.4 நாட்கள் கழித்து இரண்டாவது நீர் பாய்ச்ச வேண்டும்..
7.பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.
8.முதல் அறுப்பு 80 நாட்கள் கழித்து அருக்கலாம்.
9.அதை தொடர்ந்து 45 நாட்களுக்கு ஒரு அறுப்பு அருக்கலாம்.
Go to top
கரையான்
நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.
கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் :
1. ஒரு பழைய பானை
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம்
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்
கரையான் உற்பத்தி செய்முறை :
பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.
ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.
கரையான் செயலாற்றும் முறை :
இது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.
கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.
சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கரையான் கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாகும்.
நன்மைகள் :
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை.

No comments:
Post a Comment